வேடுபறி
சாமி ரூமில் இருந்த tape Recorder - இல் ராஜாஜி பேசி முடித்து இருந்தார். கணீர் குரலில் " பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே" என்று M.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் குரல் காதில் விழுந்ததும் கையில் இருந்த ரிமோட்டில் volume பித்தானை அழுத்தினேன். அந்த Tape ரெகார்டர் இருந்த ஷெல்ப்பின் கீழ் தான் எங்கள் வீட்டில் சுவாமி படங்கள் மாட்டி இருக்கும். இடது முதல் வலமாக, செந்தூர் பாலசுப்ரமணியர் , சரஸ்வதி லட்சுமி நடுவே விநாயகர் , ஓர் தனி விநாயகர் , அதற்க்கு கீழ் ராமர் பட்டாபிஷேகம் , மாங்காடு அம்மன் , ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர் , சரஸ்வதி , காமாக்ஷி , புவனேஸ்வரி படங்களும் , சில விக்கிரகங்களும் இருக்கும். அந்த ரூமில் ஒரு நான்கு கற்களை தவிர , வெள்ளை மொசைக் கல்லால் flooring அமைக்கப்பட்டிருக்கும். சுவாமிக்கு முன் போடப்பட்டிருந்த சிக்கு கோலங்கள் கருப்பு மொசைக் கற்களில் நன்கு தெரிந்தன . அதன் மேல் கிண்ணத்தில் பால் இருந்தது. வலது ஓரமாய் இருந்த வெள்ளி விளக்கில் காலையில் விட்ட எண்ணையில் தோய்ந்து இருந்த திரியை நிமிண்டி விட்டு தீப்பெட்டியில் " பட் " என குச்ச